search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் அவதி"

    • பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் கருப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்று சுவரை ஒட்டி மேற்கு பக்கம் பெரியாறு கால்வாயின் 12-வது கண் பிரிவு கிளை பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து வீடு மற்றும் கழிவறைகள் கட்டி உள்ளதால் பாசன கிளை கால்வாயின் அகலம் சுருங்கியது. தற்போது பெய்யும் மழையால் கிளை கால்வாயில் மழைநீர் வரத்து அதிகமாகி தண்ணீர் செல்ல முடியாமல் இடிந்து கிடந்த பள்ளி சுற்று சுவர் வழியாக மழை நீர் பள்ளி வளாகத்திற்கு புகுந்தது. தண்ணீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமையாசிரியை வீட்டு அனுப்பி வைத்தார். மற்ற வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கம்போல் வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் மாணவ. மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த அவலநிலையை போக்க மாவட்ட நிர்வாகம் கிளை கால்வாய் ஆக்கிமிப்புகளை அகற்றி சேதமான பள்ளி சுற்றுசுவர் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
    • மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில், துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்ட தீர்மானங்களை அலுவலர் சரவணன் வாசித்தார்.

    யூனியனுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுப்புற சுவர் அமைக்கவும், பெரிய பட்டினம் ஊராட்சியில் தக்குவா நகர், ஜலாலியா நகரில் உள்ள அல்ஜலாலியா மழலையர் தொடக்கப்பள்ளி சாலை உள்பட பல்வேறு ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை, படித்துறை தடுப்புச் சுவர், அங்கன்வாடி மராமத்து, உறை கிணறு நடைமேடை அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் சிவலி ங்கம்:- கீழக்கரையில் இருந்து மாயாகுளம் வழியாக ஏர்வாடி செல்லும் அரசு டவுன் பஸ் (எண்.10), பள்ளி, கல்லூரி நேரமான காலை, மாலைகளில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி சென்று திரும்பும்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிறுத்தப்பட்ட வழித்த டத்தை தொடங்க அதிகா ரிகளை வலியுறுத்த வேண்டும்.

    நாகநாதன் (அ.தி.மு.க.) :- ரகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். அம்மா பூங்கா திறக்காமல் உள்ளதால் விளையாட்டு உபகரண பொருட்கள், தளவாடப் பொருட்கள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.

    பைரோஸ்கான் (எஸ்.டி.பி.ஐ.):- சுதந்திர தினம், அரசு சார்ந்த விழாக்களில் பள்ளிகளில் யூனியன் கவுன்சிலர்களை ஆசிரியர்கள் அழைப்ப தில்லை. பெரியபட்டினம் முரைவாய்க்கால் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கமிஷனர் ராஜேந்திரன்:- பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் யூனியன் கவுன்சிலர்களை அழைக்க கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தப்படும்.

    புல்லாணி (தலைவர்):- கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவே ற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஓ. (கி.ஊராட்சி) கணேஷ் பாபு நன்றி கூறினார். துணை பி.டி.ஓ.க்கள், விஜயகுமார், மன்சூர், சத்தியகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • திட்டக்குடி பகுதியில் மழை அரசு பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
    • காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2தினங்களாக மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் சுமாரான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநத்தம், திட்டக்குடி, வாகையூர் ,இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் ,ஆவி னங்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் திட்டக்குடி பஸ் நிலையம் மற்றும் சாலைகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றதால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர். எனவே பள்ளி நிர்வாகம் இனி மழைக்காலம் என்பதால் மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
    • வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள

    இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் என 2 கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடம் எனக்கூறி 4 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு கல்வி பயின்று வந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 முதல் 3-ம் வகுப்பிற்கான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் சிறிய கட்டிடத்திற்குள் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுக்கமான சூழ்நிலையில் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் தெரிவிக்கையில், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கிருந்த பிள்ளைகள் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி

    றிய கட்டிடம் ஆகையால் இறுக்கமான சூழ்நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஒரே கட்டிடத்திற்குள் 90 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

    இதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். மேலும் வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.

    மதிய உணவு வேளையில் சாப்பிடக்கூட இடம் இல்லாமல் வெட்ட வெளியில், வெயிலில் உட்கார்ந்து பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது.

    தற்போது கொரொனா பரவும் சூழலில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இங்கு மட்டும் நெருக்கடியில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கூடத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்து கீழே விழுந்ததால், முள்கம்பிகளை கொண்டு தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வேலி வழியாக கிராமத்திலிருக்கின்ற நாய்கள் முழுவதும் பிள்ளைகள் சாப்பிடும்போது உள்ளே நுழைந்துவிடுகிறது. எனவே பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கவே அச்சமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    எனவே தமிழக முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முன்பிருந்தது போல் புதிதாக ஒரு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கேட்டுக்கொண்டனர்.

    • தியாகதுருகம் அருகே குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
    • தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து புக்கிரவாரி செல்லும் சாலை உள்ளது.இந்த தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த தார்சாலை தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் உடையார்பாளையம், உச்சி மணக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.ஒகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் சாலை வழியாக சைக்கிளில் வரும்பொழுது அவ்வப்போது கீழே விழுகிறது.

    மேலும் இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் புக்கிரவாரி ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து தலைவாசல் காய்கறி சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு விவசாயிகள் விளை பொருளை இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது ஜல்லிகள் பெயர்ந்து போன குண்டும், குழியுமான சாலையில் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னசேலம் தாலுகாவில் சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கநந்தல் சின்னசேலம் நைனார்பாளையம் உள்ளிட்ட குறு வட்டங்கள் உள்ளன.இந்த குறு வட்டங்களில் உள்ள இந்த குறு வட்டங்கள் மூலமாகவும் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி பொதுத் தேர்வு நடந்தது தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன இந்தநிலையில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் உயர்கல்வி படிக்க தேவைப்படுவதால் 1000 கணக்கான மாணவ மாணவிகள் இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக தாசில்தாரை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்களிடமும் சரியான பதில் இல்லை இதனால் விண்ணப்பித்தும் சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை கிடப்பில் போடாமல் தினசரி இ சேவை மையம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேல் நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×